Tuesday, October 24, 2006

இந்து தருமம் : உண்மையான உலகப் பொது அறம்


கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரத கண்டத்தில் மகத்தான நெறியாக விளங்கிவருவது இந்து தருமம் ஆகும். பற்பல சோதனைகள் பற்பல படையெடுப்புகள் ஆகியவற்றிற்கு மேலாக சத்தியத்தை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் தருமம் இந்து தருமமே ஆகும். நூற்றுக்கணக்கான மொழிகளில் இலக்கிய வளத்தினை செழுமைப்படுத்தியுள்ள தருமம் இந்து தருமமே ஆகும். பல இன மக்களை இன உணர்வுகளுக்கு அப்பால் ஒருங்கிணைத்த தருமம் இந்து தருமமே ஆகும். உலகத்தின் அனைத்து மத சம்பிரதாயங்களையும் தன்னுள் ஏற்கும் அன்னைத்தன்மை கொண்ட தருமம் இந்து தருமமே ஆகும்.

ஆனால் துரதிட்டவசமாக காலனிய ஆதிக்கத்தாலும் அன்னிய படையெடுப்பாலும் சமுதாய தேக்க நிலையினாலும் ஏற்பட்டுள்ள பல சமுதாய தீமைகளுக்கு இந்து தருமமே காரணம் என்று சில நிலை தடுமாறிய சகோதரர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் பாரதத்தின் சமுதாய தீமைகளும் அவலங்களூம் வாழையடி வாழையாக வந்த இந்து தரும அருளாளர்கள் தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய போதித்த வேத சத்தியங்களை இந்தியர்களாகிய நாம் மறந்ததாலேயே ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வலைப்பதிவு நம் நாட்டின் சத்திய வேத நெறியான இந்து தருமம் தனிமனித-குடும்ப-சமுதாய-தேசிய தளங்களில் நமக்கு அளித்துள்ள கடமைகளையும் நெறிமுறைகளையும் விளக்கிட முயலும் எளிய முயற்சியாகும். இந்து தருமம் என்பது பௌதீக பிரபஞ்சத்தினைக் காட்டிலும் விரிவும் ஆழமும் உடையது. அதனை என்னைப் போன்ற எளிய பாமரன் விளக்கிட முயல்வது என்பது நரி வாலால் கடலாழம் பார்த்த கதைதான்.


ஆனால் உலகிற்கே ஒளியாக விளங்கும் இந்து தருமத்திற்கு நாயேன் அளிக்கும் ஒரு வணக்கமே இது. இந்த தருமத்தினை நானும் என் சந்ததிகளும் பின்பற்றிட இந்து சமுதாயம் செய்திட்ட பெரும் தியாகங்கள், இந்து தருமத்தின் சத்தியத்தினை தம் வாழ்க்கையில் உணர்ந்திட்ட பெரும் மகான்கள் ஆகியவர்களின் நினைவுக்கு அடியேன் அளித்திடும் ஒரு சிறு சமர்ப்பணம் இந்த வலைப்பதிவு.


ஆதி ஆதி காலம் தொட்டு வந்த தருமம். ஆதி மூல சத்தியத்தை கண்ட தருமம். ஓதி ஓதி வேதங்களை உரைத்த தருமம். நீதி தேவன் கோவில் கொண்டு நிலைத்த தருமம். அதுதான்
இந்து தருமம். முற்றும் உணர்ந்த இந்து தரும முறை அறியாமல் தவறு கூறும் அறியா மனங்களை அன்பால் திருந்த செய்குவோம்.

3 Comments:

Anonymous Anonymous said...

//இந்து தருமம். முற்றும் உணர்ந்த இந்து தரும முறை அறியாமல் தவறு கூறும் அறியா மனங்களை அன்பால் திருந்த செய்குவோம்.//

இப்பணியில் வெற்றி கிடைத்தால்
மிக்க மகிழ்ச்சி ஐயா.
இப்படியான எண்ணங்கள் எங்கும்
உதயமாக வேண்டும் என்பதே
எமது விருப்பமும் ஆகும்.
நன்றி.

11/24/2006 7:13 AM  
Blogger Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway!

6/01/2009 7:20 AM  
Anonymous boss said...

matra mathathinarklukku avarkalin mathatthin adippadai vilakkangal arinthu ullargal, aanal hindu makkal alaym selvathum valibadu seivathum edho pokira pokkil friendsukku hai solluvathu bol muditthu vidukirargal. melum yarum avargalai varpurutthuvathum illai parents ulpada, bakthi sorpozhivukalaiyum yarum mathippathillai. kurippaga aanmigam enbathu 40 vayathirku mele enbathu pol nadandhu kolvathal adippadai aanmiga arivu enbathum, kadavalrkalin puranam matrum avargalthu silai allathu nilaigalin unmai vivarangal patriya sutchumangalum iruppathillai. intha kurai neekum ungal padhivukku mikka nandrigal pala. matrum en vendugol ennavenil kovilukku etho ponom vanthom endrillamal yaravathu sorpozhivu seithal konjamavathu gavaniyungal vazhkkayin sutchumangal angey vidubaduvathi unarveergal ena makkalai vendugiren. meendum nandrigal pala thiru aravindan neelagandan.

7/14/2009 9:39 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home